மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது நிரம்பிய பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்ப வத்தை திசை திருப்பும் நோக்கத் தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, செப்., 3 அன்று சிறப்பு சட்ட மன்ற கூட்டத்தைக் கூட்டி, “அபரா ஜிதா பெண் மற்றும் குழந்தைகள் மசோதா (மேற்கு வங்க குற்ற வியல் சட்டங்கள் மற்றும் திருத் தம்)” என்ற பெயரில் இந்த புதிய மசோதா தாக்கல் செய்தது. பலாத் காரம் செய்து பெண்ணை கொல்வது அல்லது கோமா நிலைக்கு தள்ளும் குற்றவாளிகளுக்கு மரண தண்ட னை விதிக்கப்படும் என பல்வேறு அம்சங்கள் மசோதாவில் உள்ள நிலையில், இந்த மசோதா சட்ட மன்றத்தில் எதிர்ப்பின்றி நிறை வேறியது.
தொடர்ந்து ஆளுநரின் ஒப்புத லுக்காக மேற்கு வங்க அரசு மசோ தாவை அனுப்பி வைத்தது. ஆனால் இந்த மசோதாவை ஆளுநர் ஆனந்த் போஸ் ஒப்புதல் அளிக் காமல், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் பரிசீலனைக்கு அனு ப்பி வைத்துள்ளார். எனவே இனி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பின்னரே இந்த சட்டம் நடைமுறைப்படுத்த முடியும்.
மருத்துவ மாணவி வன்கொ லையை திசை திருப்பவே “அப ராஜிதா” மசோதா மூலம் திரிணா முல் காங்கிரஸ் அரசு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி வருகி றது என்பது நாடறிந்த விசயம். ஆனால் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கா மல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஆளுநர் மூலம் பாஜக கூடுதல் திரைக்கதையை எழுதி நாடகமாடி வருகிறது.